articles

img

காடு வளர்க்கும் இஸ்ரேலிய தம்பதிகள்

     வியாபாரத்தில் பெரும் பணம் சம்பாதித்த பிறகும் சொந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஒரு வனம் என்னும் சொர்க்கபூமியை உலகில் இஸ்ரேலைச் சேர்ந்த அவிரா ரோசின், அவர் மனைவி யோரிக் தம்பதி போல விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சில மட்டுமே உருவாக்க முயல்வர்.

டெல் அவிவில் இருந்து தமிழ்நாட்டிற்கு டெல் அவிவில்

     தன் வணிக சாம்ராஜ்யத்தை வேண்டாம் என்று துறந்துவிட்டு தமிழ்நாட்டில் ஆரோவில்லில் இந்த இருவரும் சேர்ந்து 70 ஏக்கர் பரப்பில் வனத்தை உருவாக்கியுள்ளனர். 1998ல் முதல்முதலாக இந்தியாவிற்கு வந்தபோது இந்த நாடே தன் சொந்த நாடு என்ற எண்ணம் ஏற்பட்டது என்று இருவரும் கூறுகின்றனர். தமிழ்நாட்டையும், இங்கு உள்ள மக்களையும், பூமியையும் விரும்பிய இவர்கள் ஒரு சில ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக தங்கத்தொடங்கினர்.

நன்மை செய்யும் மனது

       வேலை பளு இல்லாமல் சமூகத்திற்கு நன்மை உடைய எதையேனும் செய்யவேண்டும் என்று அவிரா விரும்பினார். இதன் விளைவாக 2003ல் ஆரோவில்லில் 70 ஏக்கர் தரிசாகக் கிடந்த நிலத்தை வனமாகமாற்றத் தொடங்கினார். இன்று இந்த இடம் தானாகவே வளரும் வனமாக மாறியுள்ளது. சாதனா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வனம் பல வகை விலங்குகள், தாவரங்களால் செழிப்புடன் சொர்க்கபூமியாகக் காட்சி தருகிறது.

      நீர் சேமிப்பின் மூலமே வன வளர்ப்பு தொடங்கியது. பூமியில் ஈரப்பசை ஏற்பட்டவுடன் அங்கு இயற்கைக்கு பொருத்தமான வகையில் செடிகள், மரங்கள் தானாகவே வளரத்தொடங்கின.

     இன்று இங்கு மயில்கள், காட்டுப்பூனைகள், முயல்கள், குள்ள நரிகள் உட்பட பல விலங்குகள் வாழ்கின்றன. ஆனால் ஒரு சூழல் பாதுகாப்பு சங்கம் என்ற நிலையில் தங்கள் செயல்கள் மாறிவிடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். முழுவதும் சேவை என்ற நிலையிலேயே இருவரும் மரங்களை வளர்த்துப் பராமரிக்கத் தொடங்கினர்.

அனுமதி இலவசம்

   இதைப் புரிந்துகொண்டு சில தன்னார்வலர்கள் உதவிக்கு வந்ததுடன் வன வளர்ப்பு வேகமாக நடந்தது. இன்று காட்டைக் காண மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வருகின்றனர். வனத்தில் வாழும் உயிரினங்களுக்கும் மரங்களுக்கும் கேடு ஏற்படாதவகையில் வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இறைச்சி இல்லாத உணவு மட்டுமே பரிமாறப்படும்.

இளையோர் கூட்டம்

      புகைபொருட்கள், மது பானங்கள் அனுமதிக்கப்படாது. இவை காடு காண வருவோர் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய நிபந்தனைகள். இதனால் இளம் தலைமுறையினர் இங்கு வரமாட்டார்கள் என்று அவிரோ நினைத்தார். அது தவறாகப் போயிற்று. காடு காண வருவோரில் பெரும்பாலோரும் இளைஞர்களே.

    வனத்தைப் பார்க்க அனுமதி இலவசம். விருந்தோம்பலிற்கு முதலிடம் கொடுத்து வருபவர்களுக்கு மூன்று நேரமும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இருக்கும் மரம்செடிகொடியை அழிக்கும் மனிதர்களே வாழும் இந்த பூமியில் இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே!